நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,74,861 ஆக அதிகரித்துள்ளது.
2,572 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,774 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை நேற்று (27) உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்ததாகவும் ஏனைய 23 பேரும் கடந்த 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிக்குள் உயிரிழந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
42 வயது முதல் 93 வயது வரையானவர்களே உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,789 ஆக அதிகரித்துள்ளது.