கோரமான வீதி விபத்திலிருந்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த இருவர் பயணித்த காருக்கு மேலாக கொள்கலன் தாங்கிய வாகனம் பயணித்ததில் கார் முற்றாக சேதமடைந்தது.
இவ்விபத்தை நேரில் பார்த்தவர்களும், சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினரும் காரில் இருந்தவா்கள் நிச்சியமாக உயிரிழந்திருப்பார்கள் என எண்ணினர்.
எனினும் பயணித்த இருவரும் உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கேட்ட வண்ணம் இருந்தனர்.
துரிதமாக செயற்பட்ட மீட்பு பணியாளர்கள், பாரம் தூக்கியின் உதவியுடன் கொள்கலனை அகற்றி காரிலிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கொள்கலன் ஏற்றிய வாகனம் காரின் மீது சரிந்தமையாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொள்கலன் ஏற்றிய வாகனத்தின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
ஹெலிகொப்டர் விபத்து: 7 பேர் பலி
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று உத்தரபிரதேசத்தில் உள்ள சித்தாபூர் அருகே அட்டாரியா என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
பரெய்லியிருந்து அலகாபாத்திற்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் துரவ் இலகு ரக ஹெலிகொப்டர் 7 பேருடன் புறப்பட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், விமானியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த ஏர் டிராபிக் கட்டுப்பாட்டாளரிடம் திடீரென விமானி ஹெலிகொப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால், என்ன நடந்தது என்பதை சுதாரிப்பதற்கு முன்னதாக, விமானி பேசிய சில மணித்துளிகளுக்கு பிறகு ஹெலிகொப்டர் அங்குள்ள விவசாய நிலப்பகுதி பரப்பில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்திருப்பதால் இதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.