கோவை: கோவை யில் இன்ஜினியரிங் மாணவியை காதலிப்பதாக நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி சீனியர் மாணவர் பாலியல் தொழிலில் தள்ளியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கோவைப்புதூர் திருப்பதி நகரை சேர்ந்த புரோக்கர் விஜயலட்சுமி (38), இவரது மருமகன் பிருத்விராஜ் (32) ஆகியோர் 3 இளம்பெண்களை சொகுசு காரில் ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.
புரோக்கர்கள் மற்றும் காரில் இருந்த மதுரையை சேர்ந்த 20 வயதான, பி.இ 3ம் ஆண்டு படிக்கும் மாணவி, ஊட்டியை சேர்ந்த 21 வயதான (கடந்த ஆண்டு பி.இ படித்து முடித்தவர்) இளம்பெண், இருகூரை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்த 2 செல்போன், ஒரு கார், ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசில் சிக்கிய கல்லூரி மாணவி கதறி அழுதார்.
அப்போது, திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதன் விவரம் வருமாறு:
மதுரையை சேர்ந்த இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி படித்து வந்தார். இக்கல்லூரியில் சீனியர் மாணவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்போது, செல்போனில் விதவிதமாக மாணவியை செக்ஸ் போட்டோ எடுத்துள்ளார். காதலர் மீதான நம்பிக்கையில் மாணவி அதை பற்றி கவலைப்படவில்லை.
கல்லூரி படிப்பு முடிந்து வெளியே சென்ற காதலர், மாணவியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் இல்லை எனக்கூறினார்.
ரூ.1 லட்சம் தராவிட்டால் செக்ஸ் படத்தை வெப்சைட்டில் வெளியிடுவேன், நீ கல்லூரிக்கு செல்ல முடியாது, படிக்க முடியாது என மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, என் குடும்பம் வறுமையில் இருக்கிறது, நான் படித்து முடித்து சம்பாதித்தால்தான் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் என கெஞ்சியுள்ளார்.
இதை ஏற்காத காதலர், நீ பாலியல் தொழில் செய்து பணத்தை கொடுக்கவேண்டும், மறுத்தால் உன் ஆபாச போட்டோக்கள் வெப்சைட்டில் வெளியாகும் என மிரட்டியுள்ளார்.
வேறு வழியின்றி இதற்கு மாணவி ஒப்பு கொண்டார். இதைத்தொடர்ந்து, புரோக்கர் விஜயலட்சுமியிடம் மாணவியை காதலர் ஒப்படைத்தார்.
பாலியல் தொழில் மூலமாக கடந்த 3 மாதத்தில் ரூ.1 லட்சம் சம்பாதித்து காதலரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மேலும் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதற்காக, புரோக்கர்களுடன் சொகுசு ஓட்டலுக்கு வந்தபோது போலீசில் சிக்கி உள்ளார். இவ்வாறு விசாரணை யில் தெரியவந்தது. புரோக்கர்களுக்கு ஏஜன்ட்போல் செயல்பட்ட காதலனை போலீ சார் தேடி வருகின்றனர்.