முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (04) நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு மத்திய செயற்குழு கூடவிருக்கின்றது.