2009ஆம் ஆண்டு ஒருவரை, காணாமலாக்கி, அவரை படுகொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக, வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபரை, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனவர், அவருடைய மகனால் படுகொலை செய்யப்பட்டார் என்றும், அவருடைய சடலம், மொரொன்குடுவ பொலிஸ் பிரிவில் உள்ள கந்தகடே மயானத்தில் உள்ள, சடலம் புதைக்கப்பட்டிருந்த சவக்குழிக்குள் போட்டு மூடப்பட்டுள்ளது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
45 வயதான சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும், சடலத்தை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக, அந்த மாயான பூமிக்கு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.