சிங்கப்பூர்: பெங்காலி கவர்ச்சி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, சிங்கப்பூர் நகைக்கடையில் தங்க கம்மல் ஒன்றினை திருடியதாக புகார் எழுந்துள்ளது.
பெங்காலி பட உலகின் கவர்ச்சி கன்னியாக திகழ்பவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற பெங்காலி மொழி பட விழாவில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார்
நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் ஷாப்பிங் சென்றார். அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் சென்றார். நிறைய வித விதமான நகைகளை எடுத்து பார்த்து விலை கேட்டாராம். அப்போது காது கம்மல் ஜோடி ஒன்றை நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம்.
இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ 15 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி. டி.வி.கேமராவில் பதிவானது. பிறகு நகை ஏதும் வாங்காமல் நைசாக வெளியேறினார்.
நகை கடை பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே ஸ்வஸ்திகா சிறை வைக்கப்பட்டார். கம்மலை நான் எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன.
என்று தனக்கு தெரியாது என்று சொல்லி அவர் கெஞ்சியதை அடுத்து கடை ஊழியர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனராம். இது பெங்காலி திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள்.
இது குறித்து பலர் சசமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர். நடிகை ஸ்வஸ்திகா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் முன்னணி வங்காள நடிகரான சுமன் முகர்ஜியுடன், போதையில் சண்டை போட்டார்.இதுவும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது