வட சிரியாவிலுள்ள குர்திஷ் பிரதேசத்தில் ஐ.எஸ். போராளிகளால் 3 பெண்கள் உட்பட 7 ஆண்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.
அவர்களுக்கு கோபானி நகருக்கு அண்மையில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரதான குர்திஷ் நகருக்கு அண்மையில் போராளிகளுடனான மோதல்களில் ஈடுபட்ட வேளை குர்திஷ் படையணியைச் சேர்ந்த மேற்படி போராளிகளால் கைதிகளாக பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அவர்களுக்கு எதற்காக தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது அறியப்படவில்லை என சிரிய மனித உரிமைகள் அவதான நிலையத்தைச்சேர்ந்த ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.