சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன.
காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார்.
சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இருப்பினும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தினார்.
குறித்த காண்டாமணியும், தூண்டாவிளக்கும் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டதுடன் அங்கு இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார். https://trans4mind.com/counterpoint/index-gaming/market-outlook-australia-online-gambling.html
சிவனொளிபாதமலை விகாரையின் பொறுப்பாளர் தேரர் தலகஸ்கந்தே வஜிரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.