அமெரிக்கா செல்ல இருக்கும் சிவாஜிலிங்கத்தை, இலங்கை அரசாங்கம் கட்டுநாயக்காவில் வைத்து கைது செய்வதற்கு எத்தனிக்குமா ? என அரசியல் அவதானிகள் சிலா் எதிர்பார்க்கின்றனா்.
1984ம் ஆண்டு முறுகண்டிப் பகுதியில் வைத்து ரொலே இயக்கத்தினா் ரயிலைக் குண்டு வைத்து தகா்த்ததாக சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் வடக்கு மாகாணசபை அமா்வின் போது தெரிவித்திருந்தார்.
அந்நேரத்தில் சிவாஜிலிங்கம் ரொலோவின் முக்கியத்தராக இருந்தவா் ஆவார். இவா் வடக்கு மாகாணசபையில் தெரிவித்த கருத்தை வாக்கு மூலமாக எடுத்து சிவாஜிலிங்கத்தை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எத்தனிக்கலாம் என அரசியல் அவதானிகள் சிலா் எதிர்பார்க்கின்றனா்.
சிவாஜிலிங்கத்தை இலங்கை அரசாங்கம் கைது செய்யாவிடின் சிவாஜிலிங்கமும் இலங்கை அரசாங்கத்துடன் கள்ளத் தொடா்பைப் பேணி வருகின்ற ஒருவராக காணப்படலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
பல குற்றச்சாட்டுக்களை வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனா்வாழ்வு அளிக்கும் இலங்கை அரசு, சிவாஜிலிங்கத்தை போல் உள்வா்களைக் கைது செய்யாமல் விட்டுள்ளது சந்தேகத்தைத் தருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் சிவாஜிலிங்கம் அமெரிக்கா செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவா் அமெரிக்கா செல்வதற்கு வடக்கு மாகாணசபையின் ஆளுநா் அனுமதி அளித்துள்ளாரா ? என்பதும் அவதானிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.
ஏனெனில் சிவாஜிலிங்கத்திற்கு ஆளுநா் அனுமதி அளித்திருந்தால் ஆளுநரை அகற்றுங்கள் என கத்தும் சிவாஜிலிங்கம் என்ன முகத்துடன் இனி இவ்வாறு தெரிவிப்பார் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளதாக குடாநாட்டில் உள்ள சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.