தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை. வழக்குத் துறை
தேர்வு நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்
பணி: Assistant Public Prosecutor
மொத்த காலியிடங்கள்: 50
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 – ரூ.1,75,500 வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். தெளிவான விவரங்கள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021
மேலும் விவரங்களை அறிய www.tnpsc.gov.in