சுவிஸ்சில் இருந்து வந்த மகள் ஆடு உரித்ததைப் பார்த்து அதிர்ந்தார் தாய் நல்லூர்த் திருவிழாவிற்கு 25 நாளும் விரதம் இருந்து அடி அழித்து வெளிநாட்டு மாப்பிளையைத் திருமணம் முடித்துச் சென்ற மகள் பத்து வருடத்தின் பின் தனது தாயைப் பார்க்க வந்தபின் செய்த திருவிளையாடல் தாயை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுவிஸ்லாந்தில் வசித்து வந்த நல்லூர் அரசடிப்பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த வாரம் தனது இரு பிள்ளைகள்இ புருசனுடன் தனது தாயாரைப் பார்க்க வந்துள்ளார். வந்த பின்னர் மகளுக்கு ஆட்டு இறைச்சி சாப்பிட ஆசை வந்ததாகவும் அப் பகுதியில் ஆடு வளர்க்கும் ஒருவரிடம் கடாய் ஆடு ஒன்றை வாங்கி தனது வீட்டில் கட்டியுள்ளார்.
அதன் பின்னர் ஆடு அறுப்பவரை வரச் சொன்ன போது அவர் வராது விட்டதாகத் தெரிய வருகின்றது. அதன் பின்னர் தாயார் தனக்கத் தெரிந்த சிலரிடம் ஆடு அறுப்பவரை வரச் சொல்லிவிட்டு வீட்டில் வந்து போது மகளும் மருமகனுமாகச் சேர்ந்து ஆட்டை தூக்கிக் கட்டி அறுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதுவும் மகளே ஆடு உரிப்பதைப் பார்த்து அலறியுள்ளார் தாயார். எத்தனை விரதம் இருந்தவள் இப்போது இப்படிச் செய்கின்றாளே என தாயார் புலம்பியதாகத் தெரியவருகின்றது.
தாம் வெளிநாட்டில் இவ்வாறான தொழில்களே செய்துவருவதாக மகள் தனது தாயாரைச் சமாதானப்படுத்தியுள்ளார்.