புகையிரத பயணம் வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் பிள்ளைகளுக்கு புதிய விடயமாகவே இருந்து வருகின்றது. காரணம் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின்போது வட மாகாணத்தில் ரயில் பயணம் இடம்பெற்று இருக்கவே இல்லை.
யுத்தத்துக்கு பிந்திய வட மாகாணத்தில் ஏராளம் கட்டுமாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.
புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டு, புகையிரத சேவைகள் சேவைகள் மீள கட்டி அமைக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் பரீட்சார்த்தமாக சாவகச்சேரிக்கும் யாழ்தேவி ரயில் சென்று உள்ளது.
புலிகள் இயக்க முக்கியஸ்தராக இருந்த கே. பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனால் நடத்தப்படுகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகள் அண்மையில் கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரைக்கும் மகிழ்ச்சிப் பயணம் ஒன்றை ரயிலில் மேற்கொண்டு இருந்தனர். இதுவே இவர்களின் முதலாவது ரயில் பயணம் ஆகும்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.