ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் சில மாகாண ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்தவகையில், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென்மாகாணம், வடமேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்கள்இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நேற்றையதினம் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், கிழக்கு ஆளுநர் ஷான் விஜேலால் டி சில்வா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, ஊவா ஆளுனர் மைத்திரி குணரத்தின மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில் ஆகியோரே இவ்வாறு இராஜினாமா செய்திருந்தனர்.