18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர மற்றவர்களுக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். அதற்குப் பிறகு மதிய உணவிற்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் கூடியதும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்தார். அதற்குப் பிறகு இளவரசி தரப்பு வழக்கறிஞர் அஷ்மத் பாஷா வாதாடினார்.
இதற்குப் பிறகு வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயல்லிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.
மனித உரிமைகளுக்கு எதிரானது ஊழல்: ஜெ., ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதி கூறிய காரணம்
ஊழல் வழக்குகளில் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் அரசு தரப்பு வக்கீல், திடீரென குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் பெரும் ஊழல் செய்தவர்கள் என்பது சாட்சியங்கள் வாயிலாக கீழ் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட் நீதிபதி தனது தீர்ப்பில் மிக விளக்கமாக இந்த தண்டனை எதற்காக என்பதை தெரிவித்துள்ளார்.
எனவே அரசு தரப்பு வழக்கறிஞர் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தாலும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. லாலுபிரசாத் யாதவ் வழக்கை ஜெயலலிதா வக்கீல் சுட்டிக்காட்டி உடனடியாக ஜாமீன் வழங்க கேட்டார்.
ஆனால் லாலு பிரசாத் கூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமீன் பெற்றார். ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிணை மனு தள்ளிப்போனதற்கு வழக்கறிஞர்கள் செய்த குளறுபடியே காரணம்
07-10-2014
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிணை மனு தள்ளிப்போனதற்கு வழக்கறிஞர்கள் செய்த குளறுபடியே காரணம் என்று கூறப்படுகிறது.
யலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி நீதிபதி ஜோன் மைக்கேல் டி குன்ஹா வழக்கில் செப்டம்பர் 20ம் திகதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16ம் திகதி nஜயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் திடீரென புதிய மனுவை தாக்கல் செய்தனர்.
அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துத்கு மாற்ற வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கும் திகதியை வேறு திகதிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரினர். இதையடுத்து நீதிபதி டி குன்ஹா வழக்கின் திகதியை செப்டம்பர் 27ம் திகதிக்கு மாற்றலாமா என அவர்களிடம் கேட்டார்.
இந்த திகதியை நீதிபதி டி குன்ஹா சொன்ன உடனேயே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்திலும் அசோகனும் மகிழ்ச்சியில் சரி என்றார்கள். மற்ற வழக்கறிஞர்களும் உற்சாகமான முகபாவம் காட்டினார்கள்.
அதற்குக் காரணம் தீர்ப்பு திகதியான 27ன் கூட்டுத்தொகை 9 என்பதுதான். ஜெலலிதாவுக்கு இது ராசியான எண் என்று வக்கீல்களே முடிவு செய்து, 27ஆம் திகதியை ஒப்புக்கொண்டார்கள்.
வழக்கு விசயத்தில் ஆரம்பம் முதலே கூர்ந்து கவனம் காட்டி வரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, அப்போதே வக்கீல்களிடம் ஓடிப்போய், அந்த திகதி வேண்டாம் என்றும் அதில் உள்ள சிக்கல்களையும் கூறியுள்ளனர்.
மேலும் அம்மாவுக்கு அது ராசியான எண் என்பதும் இல்லை. எனக்குத் தெரிந்து இப்போது 7 தான் அம்மாவுக்கு ராசியான எண். அது மட்டுமில்லாமல் 27ஆம் திகதிக்குப் பின் 10 நாட்கள் கர்நாடகத்தில் தசரா திருவிழா பரபரப்பு தொடரும். எல்லாமே அரச விடுமுறை நாட்கள். எனவே வேறு திகதியை கேளுங்கள்” என்றார்.
ஆனால் வழக்கறிஞர் அசோகனும் செந்திலும் அதனை ஏற்க மறுத்து, பரப்பன அக்ரஹாரா அம்மாவுக்கு ராசியான இடம் என்றார்கள்.