காரைக்கால்: காரைக்காலில் நடந்த நடன நிகழ்ச்சிக்கு கவர்ச்சி நடிகை நமீதா வராத்தால் ஆத்திரமடைந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கடந்த 2 மாதங்களாக அந்த்த் தனியார் நிர்வாகம், நமீதா உள்ளிட்டோர் படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின் விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.
நமீதா உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி என காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கூப்பன் படு விறுவிறுப்பாக விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பெரும் திரளாக நமீதாவைத் தரிசிக்க டிக்கெட் வாங்கியவர்கள் குழுமினர். அனைவர் பார்வையும் நமீதா ஏறப் போகும் மேடை மீதே இருந்த்து.
விஜய் படத்தில் பவர்ஸ்டாரா?
விஜய் படத்தில் பவர்ஸ்டார் நடித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது கூடிய விரைவில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
நேற்று விஜய்யின் பிறந்தநாள். சக நடிகர்கள் – நடிகைகள் உள்ளிட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பவஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் விரைவில் நாம் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.
இதனால், விஜய் படத்தில் பவர்ஸ்டார் நடிகக் வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. பவர்ஸ்டார், விஜய்யுடன் நடிக்க விரும்பியே இத்தகவலை ட்விட் செய்துள்ளார்.
சிவனமைய பாடல் காட்சி – யாழ்