கொலம்பியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய பிரசாத்தின்போது அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியான வான் மனுயெல் ஸன்டொஸ் பெரும் சங்கடத்தினை எதிர்நோக்கியுள்ளார்.
62 வயதான ஸன்டோஸ் கடந்த 2010ஆம் ஆண்டில் கொலம்பியாவின் ஜனாதிபதியாகத் தெரிவானார். அயல்நாடுகளுடான அரசியல் சர்ச்சை, உள்நாட்டு யுத்தம் போன்றவற்றை சமாதானமாக முன்னெடுத்து வரும் ஸன்டொஸ் ‘பீஸ்மேக்கர்’ என அழைக்கப்படுகின்றார்.
இவர் அண்மையில் கொலம்பியாவின் பரான்குயில்லா நகரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான மிக முக்கியமான பிரச்சார உரையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இவருக்கு சிறுநீர் வெளியேறி காற்சட்டை ஈரமாகியுள்ளது.
இதனை சற்றும் அவதானிக்காத ஸன்டொஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.கொலம்பிய ஜனாதிபதிக்கு பெரும் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் வீடியோவாக இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஸன்டொஸுக்கு ஏதாவது நோய் உள்ளதா எனத் தெரியவில்லை. இது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.