தமிழகத்தின் இலங்கைத் தமிழர் அகதி முகாமில் வசிக்கும் பெண்ணொருவர் குடும்ப தகராறு காரணமாக, தலைக்கு பூசும் ஹேயார் டையை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தாரமங்கலம் அருகே, குருக்கப்பட்டி இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் புவனேஸ்வரி என்பவரின் மகன் கமலேஷ்வரன்.
பெயிண்டராக வேலை பார்க்கும் இவர், மூன்று வருடங்களுக்கு முன்பு, அதே முகாமைச் சேர்ந்த, ஆரோக்கியமேரி, என்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை பிறக்காததால், கமலேஷ்வரனின் உறவினர்கள் ஆரோக்கியமேரியை கொடுமை செய்து வந்ததாக தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.
இவர்களின் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத ஆரோக்கியமேரி, நேற்று முன்தினம், தலைக்கு அடிக்கும் ஹேயார் டையை குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அருகிலிருந்தவர்கள் ஆரோக்கியமேரியை மீட்டு, சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.