அரசியல் எண்டது நலன்களின் அடிப்படையில்தான் இயங்குகிறது எண்டால், அவரவர் தமக்குத் தமக்குச் சாதகமான முடிவுகளைத்தான் எடுப்பினம்.
அப்பிடித்தான் கடந்த காலத்திலும் நடந்திருக்கு.
இப்பவும் அப்பிடித்தான் நடந்து கொண்டிருக்கு.
இனியும் அப்பிடித்தான் நடக்கும்.
இந்த அடிப்படையிலதான் உலக நாடுகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்தோட தொடர்பு கொண்டு உறவாடி வருகுதுகள்.
இலங்கையும் அப்பிடித்தான் உலகத்தோட உறவாடிக் கொண்டிருக்கு.
இதில மகிந்த ராஜபக்ஷ எண்டால் என்ன ரணில் எண்டால் என்ன சோமசுந்தரமோ கந்தசாமியோ காதரோ அல்லது வேற யார்தான் ஆட்சியில இருந்தாலும் இதுதான் விதி.
அறத்தின் அடிப்படையிலயும் நீதியின் அடிப்படையிலயும் உலகம் இயங்குமாக இருந்தால் உலகத்தில எத்தனையோ இனங்கள் எப்பொழுதோ விடுதலையைப் பெற்றிருக்கும்.
எத்தினையோ இனங்கள் உரிமையைப் பெற்றுச் சுதந்திரமாக வாழும். இலங்கைத்தமிழர்கள் இப்பிடி அறுபது வருசமாக அலைக்கழிஞ்சு கொண்டிருந்திருக்க மாட்டினம்.
இவ்வளவு கொள்ளையாக சனங்கள் செத்திருக்கவும் மாட்டுதுகள். ரண்டு மாசத்துக்கு முதல், காசாவில ரண்டாயிரத்து ஐநூறு பேர் செத்திருப்பினமா?
அறம் எண்டது நான் முதலே சொன்னமாதிரி அவரவர் தமக்குத் தமக்கு ஏற்றமாதிரி உருவாக்கி வைச்சிருக்கிற ஒண்டு.
அது எல்லாருக்கும் பொருந்தும். பொதுவாக இருக்கும் எண்டில்லை.
இதை விளங்கிக் கொண்டுதான் நாங்கள் அரசியல் செய்ய வேணும்.
உலகத்துக்கு தமிழர்கள் ஒண்டும் பெரிய நலன்களைக் குடுக்கிற ஆட்கள் இல்லை. சாதாரணமாகவே கஞ்சப் பயல்களாகத்தான் பெரும்பாலான தமிழர்கள் இருக்கினம்.
மனசிலையும் கஞ்சத்தனம். வாழ்க்கையிலயும் கஞ்சத்தனம்.
இலங்கைத்தமிழர்களின்ரை நிலப்பகுதியும் பெரிய செல்வம் கொழிக்கிற பகுதியில்லை.
முந்தி நீளமான கடல் வடக்குக் கிழக்குப் பகுதிகளில இருந்திது. இப்பவும் அந்தக் கடல் அப்பிடித்தான் இருக்கு. ஆனால் கடலில இந்திய மீனவரற்றை ஆதிக்கமும் அத்துமீறலும்தான் நடந்து கொண்டிருக்கு.
இலங்கைக் கடற்படை கொஞ்சம் இறுக்கமாக இருந்து இந்திய மீனவர்களைக் கைது செய்து. படகுகளையும் பறிக்காட்டில் இந்திய மீனவர்கள் இங்க உள்ள கரைக்கே வந்து, வாடிக்குள்ள இருக்கிற வலையை எடுத்துக் கொண்டு போயிடுவாங்கள்.
அந்தக் காலத்திலயே மாதகல், வல்வெட்டித்துறைப்பகுதிக்கு வாற இந்திய மீனவர்கள் தங்கட வம்சத்தை இந்தப்பகுதிகளில பெருக்கிப்போட்டுப்போன சங்கதிகள் எல்லாம் உண்டு.
வடக்கு கிழக்குப் பகுதிகள் விவசாயத்தையும் ஆதாரமாகக் கொண்டது எண்டு ஒரு பேச்சு இருக்கு.
வடக்குக் கிழக்கின் விவசாயம் இப்ப மெல்ல மெல்ல படுத்துக் கொண்டு வருகுது.
1970 களில விவசாயம் ஒரு முக்கியமான தொழிலாகவும் மையப்பொருளாதார வழிமுறையாகவும் இருந்தது.
அப்ப பெரும்பாலான தமிழர்கள் – தமிழ் இளைஞர்கள் விவசாயம் செய்யப்புறப்பட்டார்கள்.
இப்ப பரம்பரை விவசாயக்குடும்பங்களே அந்தத் தொழிலைச் செய்வதை விரும்பவில்லை. இளைஞர்களின் கவனம் எல்லாம் புலம்பெயர்ந்து மேற்குலகத்தையோ அவுஸ்ரேலியா போன்ற நாடுகளையோ நோக்கிப் போவதாக உள்ளது.
இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் அரசாங்க உத்தியோகத்தை நாடுகிறார்கள்.
அரசாங்க உத்தியோகம் பார்ப்பதில் தமிழர்களுக்கு அலாதி ஈடுபாடிருக்கு.
இல்லையெண்டால் கோழி மேய்த்தாலும் கவுண்ட்மெந்திலதான் (அரசாங்கத்திலதான் ) மேய்க்க வேணும் எண்டு பொன்மொழியைச் சொல்லுவினமா?
இப்பிடியான மென்ராலிற்றியோடயும் யதார்த்தத்தோடயும் இருந்து கொண்டு லட்சிய அரசியலை வென்றெடுக்கிறது எண்டால்…. தமிழீழத்தைக் காண்கிறது எண்டால்…
தமிழர்கள் வெளியாருக்கு உவப்பளிக்கக் கூடிய நலன்களை வழங்கக் கூடிய நிலத்தையோ வளத்தையோ கொண்டதும் இல்லை.
இலட்சிய அரசியலை நிறைவேற்றக் கூடிய மனப்பாங்கை உடையவர்களும் இல்லை.
அப்பிடி இருந்த போராளிகளே இப்ப சிதைஞ்சுபோயிருக்கும்போது எப்பிடி வரும் விரும்பிய தீர்வு