குழி ஒன்றில் காணப்பட்டசேற்று நீர் பஸ் ஒன்றின் சக்கரத்தில் பட்டு தங்கள் மீது தெறித்ததால் ஆத்திரம் கொண்ட முச்சக்கர வண்டி சாரதிகள், பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று அதன் சாரதியின் தலையை தேங்காயினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த சாரதி கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களின் ஒருவரை கம்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் தலை மறைவான மற்றைய நபரை தேடி வருகின்றனர்.
சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை காலை குறித்த பயணிகள் பஸ் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற போது கம்பளை ஹெட்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் சேற்றுக் குழிக்குள் தங்கியிருந்த தண்ணீரில் பஸின் டயர் வீழ்ந்ததில் அதிலிருந்த சேற்று நீர் சந்தேகநபர்கள் மீது பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட முச்சக்கர வண்டி சாரதிகள், குறித்த பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று உலப்பனை உடகம பிரதேசத்தில் வைத்து அதனை மறித்து சாரதியின் தலையில் தேங்காயினால் தாக்கியதான விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. இதனால் காயமடைந்த சாரதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை செய்யப்பட்டு வருகிர்.