சுவிசில் திருடனை எட்டி உதைத்த பொலிசாருக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் லுசென் மாகாணத்தில், கடந்த 2013ம் ஆண்டு யூன் 3ம் திகதி, இரண்டு திருடர்கள் கடையொன்றில் புகுந்து திருட முயன்றுள்ளனர்.
அப்போது ஒரு திருடன் அங்கிருந்த கண்காணிப்பு கமெராவிலிருந்து தப்பி ஓடி சென்றுள்ளான், மற்றொரு திருடன்… ஹென்ஸ்லர் என்ற ரோமானிய பொலிசாரிடம் பிடிபட்டான். இத்திருடனை மடக்கி பிடித்த பொலிசார், தனது கால்களால் திருடனின் தலையில் 5 முறை சரமாரியாக தாக்கியதில், திருடன் பலத்த காயமடைந்துள்ளான்.
இச்செய்தி ஊடகங்களால் பலமுறை ஒளிபரப்பட இந்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஹென்ஸ்லர் மீது வழக்கும் தொடரவும் வழிவகுத்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, திருடனை கடுமையாக தலையில் தாக்கியது குற்றம் என தீர்பளித்ததால், ஹென்ஸ்லர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் திருடனை தாக்கியதற்காக 1000 பிராங்குகள் அபராதமும், நீதிமன்ற அபராதமாக 800 பிராங்குகளும் மற்றும் கூடுதலாக 12,600 பிராங்குகளும் ஹென்ஸ்லருக்கு அபராதமாக விதித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்களை தோண்டி எடுத்து தின்ற கொடூரன் மீண்டும் கைது!
15-04-2014
பாகிஸ்தானின் ஒதுக்குப்புறமான டர்யா கான் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான முகம்மது ஆரிப் (35), முகம்மது ஃபர்மான்(30) ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர்.
உள்ளூர் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 100 குழந்தைகளின் பிணங்களை தோண்டி எடுத்து,
அவற்றை சமைத்து தின்றதாக இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து கடந்த ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
’இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது’ என்பது போல், நரமாமிசம் தின்றுப் பழகிப்போன இவர்கள் நாக்கும் சும்மா இருக்காமல் திணவெடுத்துக் கொண்டே இருந்தது.