மாத்தறை, தங்காலை பிரதேசத்தில் தனது திருமண வைபத்துக்காக ஒப்பனை அறைக்கு சென்று தயாராகிக் கொண்டிருந்த மணமகள் அரைகுறையான திருமண அலங்கரிப்பு ஆடையுடன் வேறொருவருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தங்காலை பிரதேசத்தை இப்பெண் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரொருவருடன் திருமணம் செய்து கொள்வதற்குத் தயாராகியிருந்த நிலையிலே இவ்வாறு பிறிதொரு இளைஞனுடன் தப்பிச் சென்றுள்ளார்.
காதல் தொடர்பின் பின்னர் இவ்விடயம் தொடர்பில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருமண தினத்தன்று அதிகாலை 3 மணியளவில் மணப்பெண் அலங்காரம் செய்து கொள்வதற்காக ஒப்பனை அறைக்கு சென்றிருந்த போது வேறொரு இளைஞருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அறிந்து கொண்ட மணமகள் வீட்டார் சம்பவ இடத்துக்குச் சென்று தேடிப்பார்த்த போது, மணமகள் தொலைபேசி அழைப்பொன்றின் பின்னர் அரைநிர்வாண கோலத்தில் அவ்வறையிலிருந்து தப்பிச் சென்றிருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.
பின்னர் மணமகனால் இச்சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டிருந்த நிலையில் மணமக்கள் வீட்டாரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த மணப்பெண் இரு இளைஞர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்ததாகவும் தான் காதலித்து வந்த மற்றைய இளைஞருடனேயே அவர் இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவதினத்தன்று பகல் வேளையில் அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வைத்து மணமகள் மாத்திரம் அவரின் குடுமபத்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.