பிரசவ வலியினால் துடித்துக் கொண்டிருந்த பெண்னை வட்டுக்கோட்டை பொலிஸார் தங்களது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அந்தப் பெண் இடைவழியில் குழந்தை பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணே பொலிஸ் ஜீப்பில் பெண் குழந்தையை பிரசவித்தவர் ஆவார். மேற்படி பெண் நேற்று முன்தினம் பிரசவ வலி காரணமாக முச்சக்கரவண்டியில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதன் போது முச்சக்கரவண்டி இடைநடுவில் பழுதடைந்துள்ளது.
பிரசவ வலிகாரணமாக துடித்துக்கொண்டிருந்த பெண்ணை அவ் வழியால் வந்த வட்டுக்கோட்டை பொலிஸார் தமது ஜீப் வண்டியில் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் ஜீப் வண்டி ஐந்து சந்தி பகுதியை அண்மித்துக் கொண்டிருந்த போது குறித்த கர்ப்பிணி ஜீப் வண்டியில் பெண் குழந்தையொன்றை ஒன்றைப் பிரசவித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் வாகன சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த பெண்ணை அனுமதித்ததுடன் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். குறித்த பெண்ணின் குடும்பத்தினரும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.