யாழ் தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு இன்று 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை -இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தினாவினால் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்டிடமானது மலேரியா,கசநோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்-2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.