தேர்தல் விதிகளை மீறிய நாய் கைது!

இந்தியாவில் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாய் ஒன்றையும் அதன் உரிமையாளரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றது.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்புகள் கட்டம்கட்டமாக நடைபெற்று வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் வாக்களிப்பு நடைபெற்றது.
அன்றைய தினம், பிரதமர் மோடிக்கு ஆதரவான சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை சுமந்துகொண்டு திரிந்த நாயையும் அதன் உரிமையாளரையும் கைது செய்ததாக மஹாராஷ்டிரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதகாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment