புலம்பெயர்ந்தவர்கள்
கணணிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கைப்பற்றப்பட்ட ltte supporters demoதொலைபேசிகள் அதேபோல கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பன புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய ஒரு தோராயமான அறிவைப் பெறுவதற்கு உதவின.
புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் பிளவுபட்ட வௌவேறு பிரிவுகளின் ஆதரவு இந்த முயற்சிக்கு கிடைத்திருப்பதுதான்.
ஒப்பீட்டளவில் பெரிய பிரிவுகளான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான அனைத்துலக செயலகம்,அதேபோல அதற்குச் சமமான பிரிவான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகத்தின் தலைமையிலான தலைமைச் செயலகம் போன்ற இரு பிரிவுகளுமே இதற்கு உதவியுள்ளன.
விநாயகம் பிரிவின் நிதியுதவி பிரதானமாக பிரான்சில் இருந்து கிடைத்த அதேவேளை நெடியவன் பிரிவிலிருந்து பணம் சுவிட்ஸலாந்தில் இருந்து வந்துள்ளது.
ஆரம்பத்தில் பாதுகாப்பு தரப்பினரால், புத்துயிர்ப்பு பெற்ற எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு வலுவாக உள்ளது என்பதையோ அல்லது தீவில் புலிகளுக்கு சாத்தியமான பங்களிப்பு எப்படியிருக்கிறது என்பதையோ தெரிந்து கொள்ள முடியவில்லை.
கொழும்பிலும் மற்றம் ஏனைய இடங்களிலும் நடைபெறக்கூடிய சாத்தியமான கொலை முயற்சிகள், களவு மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியை பயன்படுத்தி நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கண்டுபிடித்தல், மற்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர்
முதல் தடவையாக எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர் ஒருவர் மூலமாக காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதுக்கான காரணங்கள், போன்றவை சம்பந்தமான ஆரம்ப விசாரணைகள், புலிகளின் புத்துயிர்ப்பு பற்றி பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும் கருவியாக அமைந்தன.
அதன் விளைவாக அதிகாரிகள், கோபி மறைந்திருந்த அறைக்குள் ஆயுதம் இன்றி கண்காணிப்பாளர் ரட்னகார சென்றதைப் போன்ற ஒரு செயலை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்துக்கு இடமளிக்க விரும்பவில்லை.
இநத கடின அணுகுமுறை காரணமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் பயங்கரவாத சந்தேக சுற்றிவளைப்புகளின்போது பின்பற்றப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இருபாலாரையும் சேர்ந்த பல்;வேறு வயதினரையும் கொண்ட 70க்கும் மேற்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப் பட்டார்கள்.
அநேகமாக அவர்கள் அனைவருமே கொடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படடார்கள். முக்கிய சந்தேக நபர்கள் கொழும்பிலுள்ள ரி.ஐ.டி தலைமையகத்தில் விசாரணைக்காக அடைக்கப்பட்ட அதேவேளை மற்றவர்கள் பூசாவிலுள்ள தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்கள்.
அநேகமான சந்தாப்பங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்களைச சந்திப்பதற்காவும் மற்றும் அவர்கள் வாழும் நிலமைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்குமான வழிகள் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்காகவும் வழங்கப்பட்டன.
பல சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகள் நிலுவையிலுள்ளபோது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அரசாங்கமும் பாதுகாப்பு அதிகாரிகளும் எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கொண்ட கடினமான நடவடிக்கைகள் விகிதாசாரமற்ற விதத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் உண்மையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அளவுக்குமீறி செயற்பட்டவிதம் ஒரு அப்பட்டமான காட்சியாகத் தோன்றியது.
ஒரு சிறிய கொசுவை நசுக்குவதற்கு மிகப் பெரிய சம்மட்டி ஒன்றை பயன்படுத்துவது போல இருந்தது அந்தக் காட்சி அதிகாரிகள் பக்கம் நியாயமாகப் பார்த்தால் அந்த அச்சுறுத்தல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த அச்சுறுத்தலைப் பற்றிய ஒரு சரியான பிடித்தம் அவர்களிடம் இருக்கவில்லை.
மோசமான ஆபத்து எற்படலாமென்கிற அச்சம் ஏற்பட்டது. பாதுகாப்பு நிறுவனத்தால், நீண்ட காலமாக இல்லாதிருந்த போர் முரட்டுத்தனமாக மீண்டும் எழுவதைக் கண்டு அமைதியாக இருந்தவிட முடியாது. அதிகாரத்தின் தாழ்வாரங்களில் எச்சரிக்கை மணிகள் முழங்கின. அதுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆரம்ப பதில்.
சந்தேக நபர்கள்
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் மற்றும் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது ஒரு கடினமான செய்கையாக தோன்றிய போதிலும், அப்பாவிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது சிரமங்கள் என்பனவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும்.
மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பகடைக் காய்களாக பயன்படுத்தப் பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய, பணம் மாற்றும் முகவர்கள் தொழில் நுட்ப ரீதியாக பொருள் வடிவில் உதவி வழங்கிய குற்றவாளிகள் என விசாரணைகள் மூலம் தெரியவந்தபோதும், அவர்கள் கைது செய்யப்படவில்லை.
விசாரணைகளின் பின் எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்களின் அநேக குடும்ப அங்கத்தவர்களும் கூடக் கைது செய்யப்படவில்லை. கோபியின் தாய் மற்றும் மனைவி போன்ற முக்கிய சந்தேக நபர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதேபோல தெகிவளை வெதுப்பகத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டார்கள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் பருத்தித்துறையில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பின்னர் விடுவிக்கப் பட்டார்கள்.
எதிர்கால எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்புக்கு பயன்படுத்தவென வெளிநாட்டு நிதியின் மூலம் வாங்கப்பட்ட ஒரு ஆழ்கடல் மீன்பிடி இழுவைப் படகு பற்றிய உண்மை விசாரணையாளர்களை எச்சரிக்கை அடைய வைத்தது.
அந்த இழுவைப் படகு ஒரு சிங்கள மீன்பிடி முதலாளியிடமிருந்து 2.9 மில்லியன் ரூபாக்களுக்கு வாங்கப்பட்டது. அதைக் கொள்வனவு செய்வதற்கான பணம் பிரான்சில் தற்போது வசிக்கும் வீரமணி என்கிற ரீகனிடமிருந்து அனுப்பப் பட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கு வீரமணி ஒரு வாகன ஓட்டுனராக நிண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
வீரமணி அந்தப் பணத்தை நீண்ட காலம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய தனது மூத்த சகோதரனது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். அந்த இழுவைப்படகு வீரமணியின் இளைய சகோதரரின் பெயரில் வாங்கப் பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி அந்த இழுவைப் படகு எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து ஆயுதங்கள், ஆட்கள் என்பனவற்றை தருவிப்பதற்கும் மற்றும் நீர்கொழும்பு வழியாக இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் படுவதற்கும் பயன்படுத்தப்பட இருந்ததாம்.
இழுவை படகின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் உட்பட அதன் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட கப்பல் குழுவினர் பயங்கரவாத தடைச் சட்டததின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூத்த சகோதரனும் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் கப்பல் குழுவின் நான்கு பேரும் குற்றமற்வர்கள் எனக் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
தற்சமயம் வீரமணியின் இரண்டு சகோதரர்களும் காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்கள் மீது உள்ள குற்றம் உறுதியாக நிரூபிக்கப் படுவது கடினமான பணியாக உள்ளபடியால் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அந்தப் படகோ அல்லது அதன் உரிமையாளர்ளோ சட்ட விரோதமான எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை, அதைக் கொள்வனவு செய்வதற்கான பணம் முன்னாள் விடுதலைப் புலியாக இருந்த அவர்களது சகோதரர் ஒருவரால் அனுப்பப்பட்டது என்கிற வெறும் ஒரு காரணம் மட்டும் அவர்கள்மீது வழக்குத் தொடர்வதற்கு போதுமானதாக இல்லை.
-டி.பி.எஸ்.ஜெயராஜ்