பிரஸிலில் வழிப்பறிக் கொள்ளைகள் நடப்பது குறித்து தொலைக்காட்சிக்கு செவ்வி கொடுத்துக்கொண்டிருந்தபோதே ஒரு பெண்ணிடம் திருடன் திருட முயற்சித்திருக்கிறான்.
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திருடனால் திருட முடியாமல் போன அந்தக் காட்சியியையும் தொலைக்காட்சி கமெரா படம் பிடித்திருக்கிறது.
வழிப்பறிகள் மற்றும் ஏனைய திருட்டுக்களுக்கு அந்த ஊர் மிகவும் பிரபலமாம்.
கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளும் அங்குதான் நடக்கவிருக்கின்றன.
இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் பிரேசிலில் போலீஸார் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதனால் கொலை, கொள்ளை சகஜமாக நடைபெறுவதாகவும் அந்த பெண், தொலைக்காட்சி பேட்டியில் கூறிக்கொண்டிருந்தார்.
பிரேசில் நாட்டின் தலைநகர் Rio de Janeiro நகரில் நேற்று ஒரு பெண் RJTV என்ற தொலைக்காட்சிக்காக சாலையின் அருகில் நின்று, பிரேசில் நாட்டில் காவல்துறையினர் குறைவாக இருப்பதாக குற்றங்கள் பெருகியது குறித்து பேட்டியளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் பேட்டியளித்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துகொண்டு ஓடினான். அவன் ஓடுவதை தொலைக்காட்சியின் கேமராமேன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.
மற்றொரு தொலைக்காட்சி ஊழியர் அந்த திருடனை விரட்டி பிடிக்க முயன்று தோல்வியடைந்தார்.
தற்போது இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.