நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தை 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கோவில்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி, 100 பேருடன் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார்.
இதனால் இந்த வருட கோவில் உற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.