எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர். அதிலொருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹன விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில் இல்லை.
இன்று காவியுடையணிந்து கொண்டு சண்டியர்கள் வருகின்றனர். சேறுபூசி சண்டித்தனம் காட்டுவோர், சண்டியர்கள் இல்லை.சண்டியன் யார் என்பதை நான் நன்கறிவேன்.
பிரபாகரன் சண்டியன். அவர் என்னை கொல்வதற்கு முயன்றார். எனது உடலில் ஒரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் மரணித்துவிட்டான். நான் இருக்கின்றேன்.
விஜயவீர என்ற சண்டியனும் என்னை கொல்வதற்கு முயன்றார். அதனால் எனது உடலின் மற்றொரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் இறந்துவிட்டான். நான் உயிரோடு இருக்கின்றேன்.
தங்காலை, கலமெட்டி மீனவர் துறைமுகத்திற்கு இன்று அடிக்கல்லை நாட்டிவைத்ததன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அகதி மரணம்: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
30-06-2014
இந்தியாவில், இலங்கை அகதியான சந்திரசேகரன் (வயது 29) என்பவர் வைத்தியசாலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமையினால் அவரது உறவினர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
அகதியான சந்திரசேகரனுக்கு திடீரென்று ஏற்பட்ட வயிற்று உபாதை காரணமாக பண்டிச்சேரி மருத்துவ அறிவியல் நிலையத்தில்,உறவினர்கள் அவரை அனுமதித்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தலைமை வைத்தியர் கடமையில் இல்லை என்பதனால் மருத்துவமனையில் கடமையாற்றும் பணியாளர்கள் அவருடைய வயிற்று வலியை குறைப்பதற்காக மருந்து ஊசி ஒன்றை ஏற்றியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வயிற்று வலி அதிகரிக்க, தாங்கமுடியாத நிலையில் அவர் கத்தியுள்ளார். இது தொடர்பில் அவரது உறவினர்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உடனடியாக தெரிவித்துள்ளனர்.
ஈ.சி.ஜி சோதனைகள் செய்யப் போதே அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றறும் சுற்றத்தார் உட்பட சுமார் 150 பேர் வரை ஒன்றிணைந்து மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.