நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 36 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இவற்றில் 7 மரணங்கள் ஞாயிறன்றும் , ஏனைய 29 மரணங்களும் இம்மாதம் 2 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.
அதற்கமைய ஹட்டன் , கதுருவெல, ஹொரண, கலகெதர, களுத்துறை, ஹெட்டிபொல, பத்தேகம, கண்டி, களுத்துறை, கோனமுல்ல, கிராந்துருகோட்டை, பதுளை, கட்டுவ, கலென்பிந்துனுவெவ, மரதன்கடவல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 46 – 83 வயதுக்கு இடைப்பட்ட 18 ஆண்களும் ,
காலி, மத்துகம, களுத்துறை, அநுராதபுரம், உடலந்த, வேயங்கொட, கொழும்பு-6, யாழ்ப்பாணம், இராஜகிரிய, மக்கொன, பத்தரமுல்ல, பலாங்கொடை, இரத்தினபுரி, கஹவத்தை மற்றும் வட்டபொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 49 – 85 வயதுக்கு இடைப்பட்ட 18 பெண்களும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1441 ஆக உயர்வடைந்துள்ளது.
இதே வேளை இன்று திங்கட்கிழமை இரவு 9.30 மணி வரை 2 882 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 334 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 53 271 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்தோடு 31 802 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.