இந்தியாவின், கள்ளக்குறிச்சி எனும் இடத்தில், கணவனுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா – கள்ளக்குறிச்சியில் “என்னங்க.. நான் தூக்குல தொங்க போறேன்” என்று கணவனுக்கு தொலைபேசியில் அழைத்து கூறிவிட்டு, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கு பாரதி என்பவருடன் 6 மாதத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. கணவன், பாரதி ஒரு கட்டிட கூலி தொழிலாளியாவார். ஐஸ்வர்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ள நிலையில், சுகாதார நிலையத்திற்கு பாரதி, மனைவியை அழைத்து கொண்டு வைத்திய பரிசோதனை செய்துள்ளபோது, மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானகியுள்ளது.
அதனால், மிகவும் மகிழ்ச்சியடைந்த கணவன் பாரதி, தனது மனைவியை மாமியார் வீட்டில் கொண்டு போய்விட்டு விட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பாரதியை தொலைபேசியில் அழைத்த ஐஸ்வர்யா, “நான் தற்கொலை செய்துக்க போறேங்க” என்று சொல்லி உள்ளார். ஆனால் ஐஸ்வர்யா தன்னிடம் விளையாட்டுக்கு அப்படி சொல்கிறார் என்று பாரதி நினைத்து, அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார்.
இந்நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னர், வெளியில் சென்றிருந்த ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் நுழைந்தபோது, மகள் தூக்கில் சடலமாகத் தொங்கியதை கண்டு அலறினார். இது குறித்து பாரதிக்கு தகவல் சொல்லவும்தான் விபரீதம் புரிந்தது. தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி பொலிஸார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் திருமணமாகி, 6 மாதங்களே என்பதால், பலகோணங்களிலும் விசாரித்த பொலிஸார், மாமியார் வீட்டில் நிம்மதி இல்லை என்று அடிக்கடி ஐஸ்வர்யா தன் அம்மாவிடம் சொல்லி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.