நியூஸிலாந்தின் ஒக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மக்கள்மீது தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சுதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
முகமது சம்சுதீன் ஆதில் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு பாடசாலை ஒன்றில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சென்று குடியேறியுள்ளார்.
இவரின் தந்தை கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி 2008 ஓய்வு பெறும்வரை அந்த பாடசாலையின் அதிபராக கடமையற்றியுள்ளார்.
பின்னர் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருதுடன் அவருடன் கனடாவுக்குச் சென்று குடியேறி வாழந்து வருகின்றார்.
அதேவேளை ஒரு சகோதாரன் கத்தாரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருதாகவும் அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள ஆதில் தாயாரான சொந்த வீட்டை வாடகைக்கு தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முகமது சம்சூதீன் ஆதில் நியூஸிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஆடுபட்டமை காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூஸிலாந்து பொலிஸார் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.