சென்னை: ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாம்.
வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோனை பாலிவுட்காரர்கள் அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர், வைக்கின்றனர். சன்னி பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.
துரை தயாநிதி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அழைத்து வந்தனர். ஆபாச பட நடிகையான அவரை தமிழ் படத்தில் ஆட வைத்ததற்கு கண்டன குரல்கள் எழுந்தன.
ஆனால் அவர் அதை எல்லாம் காதில் வாங்காமல் குத்தாட்டம் போட்டுவிட்டு ரூ. 25 லட்சம் வாங்கிக் கொண்டி கிளம்பிவிட்டார். இந்நிலையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் குத்தாட்டம் போட சன்னியை தான் அழைத்துள்ளனர்.
தனக்கு மவுசு அதிகமாவதை உணர்ந்த அவர் இந்த படத்தில் ஆட ரூ. 35 லட்சம் கேட்டுள்ளார். உடனே ஓகே சொல்லி அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளனர்.