இதில் அதிகமாக உயிரிழந்தவர்கள் பாதசாரிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 5 பாதசாரிகளும் ஓட்டோவில் பயணித்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் பயணித்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம்
ஏப்ரல் 21ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சகல வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கும் சலுகைக் காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குமான காலப்பகுதி மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானியொன்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேயால் வெளியிடப்பட்டுள்ளது.