பன்னாட்டுத் தலையீடு வராவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று நேற்று யாழ்.வருகை தந்த பிரிட்டனின் அமைச்சர் பார்னொஸ் அம்மையாரிடம் எடுத்துரைத்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்.
சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார்.
நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன்.அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது நடைமுறையில் நடைபெறுவதனை இப்போது எடுத்து காட்டியிருந்தேன்.
வெளிநாட்டு ஈடுபாட்டுடன் இந்த போர் விசாரணை நடைபெறாவிட்டால் நீதியை பெற்றுக்கொள்ள முடியாமல் செல்லும் என கூறியிருந்தேன்.
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களில் வெளிநாட்டு உள்ளீடுகளை அரசு கொண்டுவருவதாக தெரியவில்லை.வெளிநாட்டு உள்ளீடுகள் வராவிட்டால் எங்களுக்கு நீதி கிடைக்காது நிச்சயம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற சட்டமானது எமது சட்டத்திற்குள் கொண்டுவரப்படல் வேண்டும்.பல நாடுகளில் இருக்கும் சட்டமாக இருந்தாலும் எமது நாட்டில் போர்க்குற்றம் இழைக்கப்படும் போது சட்டமாக இருக்கவில்லை எனவே எங்களுடைய
நாட்டு சட்டத்திற்குள் போர்க்குற்ற சட்டம் உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இது சம்பந்தமாக அரசு தரப்பு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனை அவருக்கு வலியுறுத்தி இருந்தேன்.
அதன் பின்னர் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். விதவைகள் எத்தனை பேர் அவர்களுடைய பாதுகாப்பு அவர்கள் தொடர்பான செயற்திட்டங்கள் மேற்கொள்ள கூடிய அவசியங்களை எடுத்து கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
செயற்திட்டங்கள் எவ்வாறான வகையில் அமைய வேண்டும் என எம்மிடம் கோரி அந்த செயற்திட்டங்களை எம்மிடம் தந்தால் அதற்கான நிதியுதவிகளை வளங்குவதாவும் கூறினார்.
யுத்தம் முடிந்து எட்டு வருடங்கலாகும் நிலையில் தொடர்ந்தும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான இராணுவம் இருப்பது எந்தளவிற்கு எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதனை நாங்கள் அறிவித்திருந்தோம்.
எனினும்இ சமாதானம் நோக்கி செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதற்கு நான் நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் முன்வாந்தால் கூட பலவிதங்களில் எங்களை அடிமைப்படுத்தும் விதத்தில் தான் சில நடவடிக்கைகள் எடுத்து கொண்டு இருக்கின்றனர்.
தெற்கில் எடுக்கப்படும் முடிவுகள் எங்கள் தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக இருப்பதனையும் நான் எடுத்து கூறினேன் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.