அப்பா – நடராசன், அம்மா – சரோஜினி அம்மாள், வைகை புயலை பெற்றெடுத்தவர்கள். இவருக்கு கன்னிகா, கார்த்திகா, கலைவாணி என மூன்று மகள்கள் மற்றும் சுப்பிரமணி என்ற மகனும் இருக்கிறார்.
வடிவேலு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர் என பலமுறை மேடைகளில் கூறியுள்ளார். ஆம், இவர் பள்ளிக்கூடமே சென்றதில்லையாம். தனது சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன நாடகங்களில் நகைச்சுவை நடிகர் வேடம் ஏற்று நடித்து அசத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக அப்பா மரணம் அடைய, வடிவேலுவின் குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டது. பிறகு, மதுரையில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார் வடிவேலு.
வடிவேலுவின் ஊருக்கு ஒருமுறை ராஜ்கிரண் சென்றிருந்தார். அப்போது, நடிகர் ராஜ்கிரணுடன் வடிவேலுக்கு அறிமுகம் கிடைத்தது. இந்த உறவின் பலனாக சென்னையில் ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் வடிவேலு.
வடிவேலுவின் நடிப்பு திறனை கண்டு, தனது என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பளித்தார் ராஜ்கிரண். தான் நடித்த முதல் படத்திலேயே போடா, போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடியிருந்தார் வடிவேலு!
ஆரம்பக் காலத்தில் செந்தில், கவுண்டமணியுடன் சேர்ந்து சின்ன, சின்ன நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் வடிவேலு.
இவர் முதல் முறையாக தனி நகைச்சுவை நடிகராக நடித்து தனது திறமையை நிலைநாட்டிய படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன். இதன் பிறகே தனி முதன்மை நகைச்சுவை நடிகராக வடிவேலு தலைதூக்க ஆரம்பித்தார்.
1990களின் இறுதிகளில் இருந்து, 2000 துவக்க ஆண்டுகள் என குறுகிய காலத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக உருமாறினார் நடிகர் வடிவேலு.
2003ல் வெளியான வின்னர் வடிவேலுவின் திரை பயணத்தில் ஒரு மைல்கல் என கூறலாம்
லல்லலல்லலா லல்லலல்லலா..!’ – தமிழ் சினிமாவில் வடிவேலு பாடிய பாடல்கள்
பலரது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களிலும் தனது வசனங்களால் நினைவுகொள்ளப்படும் வடிவேலு, தான் திரையில் தொடர்ச்சியாக நடிக்காத மீம்ஸ் உலகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்.
பின்னணிப் பாடகருமான வடிவேலு, தான் நடித்த படங்களில் இமிடேட் செய்த பிற நடிகர்களின் பாடல்களை இங்கு பார்க்கலாம். உங்கள் நினைவிலிருக்கும் பாடல்களையும் கமென்ட்டில் பதிவு செய்யலாம்…