அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த பேய் அங்கிருந்த புத்தங்களை தூக்கி வீசிய காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
கோர்க் நகரில் 1828 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பாடசாலையில் அதிகமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள்.
பாடசாலை முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பின்னர் பாடசாலையில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தானாக தூக்கி எறியப்படுகின்றன. அதன்பின்னர் பாடசாலை முகப்பில் கருப்பு உருவம் ஒன்று மறைந்து செல்கின்றது.
இக் காணொளி வெளியானதையடுத்து பாடசாலையில் மாணவர்கள் படிப்பது பேய்க்கு பிடிக்காத காரணத்தால் அது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது என நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்.
பாடசாலையின் தொடர்பாளர் ஒருவர், இது ஒரு சிறந்த பாடசாலை, அனைவரும் ஹாலோவீன் திருவிழாவை வரவேற்போம் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.