தலவாக்கலை, லிந்துலை பகுதியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு மண்ணை வெட்டிய சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்கல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மண்ணை வெட்டிய சந்தர்ப்பத்தில் பாரிய பாறை ஒன்று சரிந்தது, அவரது கால் அந்த பாறைக்கு அடியில் சிக்குண்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை
பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து 6 மணித்தியால முயற்சியின் பின்னர் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தை எதிர்நோக்கியவர் எஸ்.விஜயகுமார் எனும் 4 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.