இஸ்ரேலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆட்டு மந்தை ஒன்றை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் யோக்நிம் என்ற இடத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த இடம் குறித்து அறிந்த லையோர் பட்டேல் என்ற புகைப்படக் கலைஞர் ட்ரோன் கேமரா மூலம் அப்பகுதியை சுற்றி சுற்றி படம் எடுத்துள்ளார்.
அதோடு, ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்வது முதல் மீண்டும் பண்ணைக்குத் திரும்புவது வரை படம் பிடித்து அதனை டைம்லாப்ஸ் முறையில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் செம்மறி ஆட்டுக் கூட்டம் அழகாக ஓடி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எறும்பு போல் செல்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
Voir cette publication sur Instagram