பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
சிநேகன் தந்தையாரின் வருகை. அந்தக் கிராமத்து முதியவர் தள்ளாடி தள்ளாடி வரும் காட்சியைப் பார்க்கவே அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது.
சிநேகனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பின்னணி விவரங்கள் அதிகம் நமக்குத் தெரியவில்லையென்றாலும், ‘உறவுகளிடமிருந்து விலகி பல வருடமாக தனியாகத்தான் வாழ்கிறேன்’ என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை சொல்லியிருக்கிறார். தன்னுடைய ஊர் பற்றிய நினைவுகளையும் சில சமயங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தந்தையைப் பார்த்ததும் ஓவென்று கதறித்தீர்த்து விட்டார் சிநேகன். அந்த நேரத்தின் மனநிலை உண்மையாகத்தான் இருக்க வேண்டும். குழறலான மொழியில் சிநேகனின் தந்தையும் கலங்கியது மிக உருக்கத்தை ஏற்படுத்தியது.
முதியவர்கள் அழும் காட்சியைப் பார்க்க நேர்வது என்பது மிகக் கொடுமையானது. கல் மனதுள்ளவர்கள் கூட கலங்கி விடுவார்கள். அங்கும் அதுதான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே அழுது தீர்த்து விட்டார்கள். “யாரும் அழாதீங்க” என்றார் முதியவர்.
Part 01
Part 02
Part 03
Part 04
Part 05
பிக் போஸ் 73 ஆம் நாள்: தேடி வந்த உறவுகளும்; மிளகாய் தூள் அபிஷேகமும்!! -(வீடியோ)