தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாறுமொரு வீட்டினைப் படையினர் கண்கொண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைதீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
இறுதி யுத்தத்தின்போது இப் படத்தில் உள்ள வீட்டையும், பதுங்கு குழியும் விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கின்றது. இதனால் உள்ளே என்ன இருக்கின்ற என்பதை படையினர் கூட இன்னமும் அவதானிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் நுழைவாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இடையில் படையினர் துளையிட்டு பார்த்துள்ளனர். மேலும் இதனுள்ளிருந்து துர்நாற்றம் ஆரம்பத்தில் வீசியதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள வீடு செங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்தபோதே இறுதி யுத்தத்தின் போது தேசிய தலைவர் சுற்றிவளைக்கப்பட்டதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீட்டை சென்று பார்க்க முடிகின்றது. எனினும், உள்ளே சென்று பார்ப்பதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
இவ் விடயம் தொடர்பில் ஞாயிறு மாலை வரை மக்களின் கருத்துக்களை பெற முயற்சித்த போதும் அச்சம் காரணமாக வெளிப்படையாக கருத்துக் கூற மறுத்தாலும் இவ்வாறான புலிகளின் தலைவரின் வீடு என ஒரு வீட்டை படையினர் கைப்பற்றியதாகவும் அது நிலத்திற்கு கீழ் உள்ளது என அவர்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறதாக பெயர் குறிப்பிட முடியாத கிராம வாசி தெரிவித்தார்.