இலங்கை ராணுவத்திலிருந்து ரகசியமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது … இலங்கை ராணுவத்தின் மிக முக்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ள நம்பகத்தன்மையான தகவல் இது.
வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்துள்ளது ராணுவம். பின்னர் அவரை ராணுவ முகாம் ஒன்றுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அனேகமாக இது ராணுவத்தின் 53வது படைப் பிரிவின் தலைமையகமாக இருக்கலாம்.
அங்கு முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் மற்றும் முக்கிய ராணுவ தளபதி ஒருவர் முன்னிலையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சித்திரவதையை ராணுவத்தினர் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பிரபாகரனுடன் சேர்த்து பிடிக்கப்பட்ட அவரது 12 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்திரனையும் ராணுவத்தினர் சித்திரவதை செய்துள்ளனர்.
பின்னர் பிரபாகரன் கண் முன்பாக பாலச்சந்திரனை நிறுத்தி படுகொலை செய்துள்ளனர். அதன் பின்னர்தான் பிரபாகரனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்வாறு சுட்டபோது அவரது தலையின் பின் பக்கம் பிளந்து விட்டது.
மேலும், கடைசி நேர சண்டை நடந்த போரற்ற பகுதியில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகள் யாருமே உயிருடன் மிஞ்சவில்லை. அனைவருமே படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்தக் கொலைகள் தொடர்பாக ராணுவத்திடமிருந்து உண்மையான தகவல்கள் வெளி வர வாய்ப்பில்லை. எனவே உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டு வர பாரபட்சமற்ற, விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.