ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த மாதம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை முழுமையாக நிராகரித்துவிட்டது.
எனவே இதற்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை குறித்த பிரேரணையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் அறிவித்துவிட்டோம். எனவே அது தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை குறித்து ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அடுத்தகட்டமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் நவநீதம் பிள்ளை விவாரணையை முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்படுகன்றமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலஙகை குறித்து ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையக நிராகரித்துவிட்டது. அத்துடன் அதனை ஏறறுக்கொள்ளமாட்டோம் என்றும் நாங்கள் கூறிவிட்டோம்.
பிரேரணை வாக்கெடுபபுக்கு விடப்படுவற்கு முன்னரே அதனை ஏற்கமாட்டோம் என்றும் தெளிவான முறையில் அறிவித்துவிட்டோம். நாடுகள் ஆதரித்தன மற்றும் எதிர்த்தன என்பதறகு அப்பால் பிரேரணையை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என்பது முக்கியமான விடயமாகும்.
இந்நிலையில் எமது இந்த நிலைப்பாட்டுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டொம். அது தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் கடம்பைடவுமில்லை.
இலங்கை இறைமையை கொண்ட தேசிய ஒருமைப்பாட்டைக்கொண்ட நாடாகும். எனவே நாட்டின் இறைமையை மீறுகின் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் இடமளிக்க முடியாது.
மேலும் இந்தப் பிரேரணை ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக இந்தியா தௌிவாக குறிப்பிட்டுள்ளது. இதுவும் முக்கிய விடயமாகும்.
இலங்கையில் உள்ள எமது பிரஜைகளுக்கு எதனை வழங்கவேண்டும் என்று எம்மைவிட யாரும் திட்டமிட முடியாது. வேறு யாரைவிடவும் எமககே அநத பொறுப்பும் அக்கறையும்உள்ளது.
எந்தவொரு தீர்வானலும் அது எமது நாட்டின் இறைமையை மீறாத வகையில் இருக்கவேண்டும். எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமானதாக இருக்கவெண்டும்.
மீண்டும் இந்த நாட்டில் பிரச்சினை வராமல் இருக்கவேண்டும் எனபதே எமது நோககமாகும். எனவே இருக்கின்ற பிரச்சினைளை தீர்த்து ஒரு இணக்கப்பாட்டை அடையவேண்டும் என்பதனை நாங்கள் உண்ந்துள்ளோம்.
ஆனால் அந்த இணக்கப்பாடுடனான தீர்வு எமது நாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். எமது மக்கள் குறித்து எம்மைவிட அக்கறைகொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது என்றார்.