யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் (வயது 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இந்த மாணவனின் பிறந்த நாளாகும். இந்நிலையில், பிறந்தநாளில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அம்மாணவர், தனது முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன் பின்னரே, அம்மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
அண்மைக்காலங்களில் மூவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில்இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மா்ம உறுப்பில் நூல் சுற்றப்பட்டு காயத்துடன் சடலம் – இறுதிச் சடங்கில் கண்டு பிடிக்கப்பு!!
23-07-20104
இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட சடலமொன்று, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலனின் உத்தரவிற்கமையே இந்த சடலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
தொண்டமனாறு, கொட்டியாங்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த துரைராசா சின்னராசா (வயது 55) என்பவர் நேற்று திங்கட்கிழமை (21) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயர்குருதி அமுக்க நோய் அவருக்கு இருந்த காரணத்தினால், அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என நினைத்த உறவினர்கள், அவருடைய சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்காமல் இறுதிச் சடங்குக் கிரியைகளை நேற்று (21) அவரது வீட்டில் நடத்தியுள்ளனர்.
இதன்போது, சடலத்தினைக் குளிப்பாட்டுகையில் சடலத்தின் முதுகில் காயங்கள் இருந்ததுடன், மர்மஉறுப்பு றப்பர் நூலினால் கட்டப்பட்டு இருந்ததுமையும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கினர்.
இந்நிலையில், பருத்தித்துறை நீதவானுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதவானின் உத்தரவிற்கமைய சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.