யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளது பாரிய சோதனைச் சாவடி அமைந்திருந்தமை முகமாலை பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அப் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியாளர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் 40 எம்.எம். (நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40, சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு போன்றவற்றையும் அதன் போது மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை பொலிஸார் எச்சங்களை மீட்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளின் கட்டுபாட்டு பகுதியான முகமாலை பகுதியில் எப்படி பெண் விடுதலைப் புலிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும்,?
இதே இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த முகமாலை பகுதியில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தால்.., இலங்கை இராணுவத்தினர்தான் இப்பெண்களை கற்பழித்து, படுகொலை செய்திருப்பார்கள் என யூகிக்கலாம். (அப்படி நடந்திருந்தால் புலியூடகங்களும், புலியாதரவு அரசியல் வாதிகளும் அழுதுவடித்திருப்பார்கள். )
ஆனால் … இச் சடலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதால்.. கட்டாயம் இது புலிகளின் வேலையாக தான் இருக்கும்.
இந்த அப்பாவி பெண்களை யார் படுகொலை செய்தார்கள்? இவர்கள் எப்படியிறந்தார்கள்? என்பதையிட்டு…. அனந்தி, சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றோர் சர்வதேச மனிதவுரிமை ஆணைக்குழுவினரிடம் விசாரணைக்கு பரிந்துரை செய்வார்களா?