புலிகளை அழித்தமைக்காக சுவிட்சர்லாந்திலிருந்து ரோமாபுரிக்கு பறந்து சென்று மஹிந்தவுக்கு பொன்னாடை போர்த்திய தமிழன்.
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்திருந்தமை யாவரும் அறிந்திருந்தது. ஆனால் மஹிந்த ரோமில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தமிழர் ஒருவரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமை வெளிவராத செய்தி.
புலிகளின் முன்னாள் தீவிர ஆதரவாளரும் அவ்வியக்கத்தின் சட்டவிரோத பணபரிமாற்ற ஆலோசகர் அல்லது கலையை கற்பித்த ஆசான் என அறியப்படுகின்ற நபர் ஒருவராலேயே மஹிந்த பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.
ஈசன் என அழைக்கப்படுகின்ற தர்மலிங்கம் லோகேஸ்வரன் என்ற நபர் இந்து-பௌத்த சங்கம் எனும் அமைப்பு ஒன்றின் தலைவராவார். இவரே மஹிந்தவிற்கு ரோமில் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு பொன்னாடை போற்றக்கிடைத்தமையை பெரும்பாக்கியமாக கருகின்றார் ஈசன்.
இது தொடர்பில் ஈசன்; கூறுகையில் : புலிகளின் கொடும்பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்டுத்தந்த ஜனாதிபதி என்றும் போற்றத்தக்கவர் என்றார்.
நன்றி
-இலங்கை நெற்-