தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவ்வமைப்பினர் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.
அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கிகொண்டு இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கமானது 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பயங்கரவாத தடுப்பு துறையிடம் இருந்து, இலங்கை அரசுக்கு சாதகமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. “விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ந்தும் வெளிநாடுகளில் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி நடவடிக்கைகளும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன” என்கிறது, இந்த அறிக்கை.
அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட்டின் கீழ் இயங்கும், The Bureau of Counterterrorism of the United States வெளியிட்ட அறிக்கையில், “2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
ஆனால், அதற்கு முன்னரே வெளிநாடுகளில் ‘நிழல் அமைப்புகளின்’ மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பு, ஆயுத கொள்வனவு ஆகியவை செய்யப்பட்டன.
premium-idஇதில் பல நிழல் அமைப்புகள் தற்போதும் இயங்கிவருகின்றன. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாட்டாளர்களும் இன்னமும் இயங்கி வருகின்றனர்.
2009-ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏதும் இலங்கையில் நடைபெறவில்லை என்ற போதிலும், கடந்த ஆண்டில்கூட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் வெளிநாடுகளில் அவதானிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள் என உலக அளவில் 16 அமைப்புகளையும், 424 தனிப்பட்ட தமிழர்களையும் ஐ.நா. பயங்கரவாத தடைச் சட்டப்பிரிவு 1373-ன் கீழ் பதிவு செய்தபின், அமெரிக்க பயங்கரவாத தடுப்பு துறையிடம் இருந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த வகையில், இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது இந்த அறிக்கை.
தற்போது, விடுதலைப்புலிகள் வெளிநாட்டு செயல்பாட்டாளர்கள் 40 பேரின் பெயர்களில் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலரை கைது செய்து, இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில், இலங்கை அதிகாரிகள் குழுக்கள், 18 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெளியாகியுள்ள அமெரிக்க பயங்கரவாத தடுப்பு துறை அறிக்கை, வெளிநாட்டு புலி செயல்பாட்டாளர்கள் பலரை தூக்கமிழக்க செய்யப்போகிறது.
நந்தகோபன் (பழைய போட்டோ): தற்போது இலங்கை அரசின் கைகளில்!
ஏற்கனவே, நெடியவனின் வலது கையாக செயல்பட்ட நந்தகோபன், ஏற்கனவே ஈரானின் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தயாராக காத்திருந்த இலங்கை உளவுத்துறையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, இப்போது கொழும்பு வரை கொண்டுசெல்லப்பட்டு உள்ளார்.
இந்த நந்தகோபன்தான், வெளிநாட்டு விடுதலைப் புலி செயல்பாட்டாளர்களின் இணைப்பாளராக இருந்தவர். யார்யார் என்ன செய்தார்கள், செய்கிறார்கள் என்ற விபரம் அறிந்தவர். இவரிடம் இருந்து இலங்கை அரசு ஏராளமான தகவல்களை பெற்றுள்ளதாக தெரிகிறது.
அந்த தகவல்களின் அடிப்படையிலேயே, நெடியவனை முதலில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் உள்ளது.
இலங்கை அரசும், 2009-ம் ஆண்டில் இருந்து வெளிநாடுகளில் பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துவிட்டு, இப்போது திடீரென அதிரடியாக காரியங்களில் இறங்குவதன் அர்த்தம் – அவர்களிடம் பெரிதாக ஏதோ சிக்கியுள்ளது!
போகிற போக்கில் மிக விரைவில் நெடியவனை கொழும்புவில் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அது நடந்தால், தற்போது வெளிநாடுகளில் உள்ள பலரது கொழும்பு நோக்கிய ஊர்வலம் தொடங்கும்!