மும்பை: போதை மருந்து கடத்தல் வழக்கில் கணவருடன் தமிழ் நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது செய்யப்பட்டார். தமிழில் ‘நண்பர்கள்‘ படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் மம்தா குல்கர்னி. மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்தவர், இந்தியில் ‘சைனா கேட்’, ‘நசீப்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலம் ஆனார்.
இவர் திடீரென்று சினிமாவிலிருந்து விலகி ஆசிரமம் ஒன்றில் சேர்ந்து சாமியார் ஆனார். இதற்காக தலையை மொட்டையும் அடித்துக்கொண்டார். பிறகு மனதை மாற்றிக்கொண்டு இல்லற வாழ்க்கைக்கு மாறினார். விக்கி கோஸ்வாமி என்பவரை மணந்துகொண்டார்.
விக்கி போதை மருந்து கடத்தலின் பேரில் துபாய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். நன்னடத்தை காரணமாக பிறகு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறி மம்தாவை மணந்துகொண்டார். இந்நிலையில் கென்யாவில் போதை மருந்து கடத்தியதாக கணவர் விக்கி கோஸ்வாமியுடன் மம்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்பது நிரூபணமானால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவார்கள். ஏற்கனவே விக்கி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவார்கள் என்று தெரிகிறது.
பேய் வேஷம் போடுகிறார் எமி
13-11-2014
சென்னை: பேய் வேஷம் போடுகிறார் எமி ஜாக்சன்.லண்டன் பியூட்டி எமி ஜாக்சன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மாடல் அழகியாக வரும் எமி இப்படத்தில் அதற்கு நேர் எதிராக பேய் வேஷம் போடுகிறார்.
‘மாஸ்’ என டைட்டில் வைத்திருப்பதால் கமர்ஷியல் கலந்த மசாலா படமாக இருக்குமா என்று கேட்டபோது, ‘முழுக்க திகில் கிளப்பும் பேய் படமாக இருக்கும்‘ என்று பட தரப்பிலிருந்து பதில் வருகிறது.
சரோஜா, கோவா, பிரியாணி, மங்காத்தா என ஜாலியான பொழுதுபோக்கு படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு இயக்கும் மாறுபட்ட கதைக்களமாக இப்படம் இருப்பதுடன் ஏழாம் அறிவு, ‘கஜினி’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அஞ்சான்’ என வர்த்தக ரீதியிலான படங்களில் நடித்து வந்த சூர்யாவும் முதன்முறையாக பேய் கதைக் களக்கத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ‘யாவரும் நலம்‘ பேய் கதையை படமாக்கிய விக்ரம் குமார் அடுத்து இயக்கும் படத்துக்கு ’24’ என பெயரிட்டுள்ளார். இப்படத்திலும் சூர்யா நடிக்கிறார்.