போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த 18 வயது இளம்பெண். பாகிஸ்தானில் பெரும் பதட்டம். போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த 18 வயது இளம்பெண். பாகிஸ்தானில் பெரும் பதட்டம்.
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 வயது இளம்பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்த கயவனை போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து மரணம் அடைந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த Aamna Bibi, என்ற இளம்பெண் 18 வயதே ஆனவர். இவர் Muzaffargarh district in Punjab என்ற பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பலாத்காரம் செய்யப்பட்ட Aamna Bibi, அவர்களின்சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டே நாட்களில் ரூ.70,000 போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து அந்த குற்றவாளி வெளியே வந்துவிட்டதாக தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியான Aamna Bibi, காவல்நிலையம் சென்று நியாயம் கேட்டு போராடினார்.
ஆனால் காவல்நிலைய அதிகாரிகள், அவர்தான் பலாத்காரம் செய்தார் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்ததாக கூறினார்.
இதனால் ஆவேசமடைந்த Aamna Bibi, உடனே அந்த போலீஸ் நிலையம் முன்பு தன்னைத்தானே தீயினால் கொளுத்திக்கொண்டு படுகாயம் அடைந்தார்.
உடலின் 80% தீயில் எரிந்துபோனதால் மருத்துவமனையில் Aamna Bibi, பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியையும், லஞ்சம் வாங்கி விடுவித்த போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.