யாழ்., ஈவினை கிழக்குப் பகுதியில் தனது மகனின் மர்ம உறுப்பினை உடைந்த போத்தலினால் வெட்டிய தந்தையை நேற்று திங்கட்கிழமை (09) மாலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 வயதான மகன், யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதினை அறிந்த மகன் அதனைத் தட்டிக்கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த தந்தை பியர் போத்தலினை உடைத்து மகனின் மர்ம உறுப்பினை வெட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.