யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அரச உத்தியோகத்தரின் 19 வயது மகள் அவா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த தொழிலாளியுடன் காதல் வயப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த வருடன் க.பொ.த உயா்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பிரபல பெண்கள் பாடசாலை மாணவியே இவ்வாறு வீடு கட்டிய மேசனுடன் தலைமறைவாகியுள்ளார்.
முக்கிய பதவி ஒன்றில் இருக்கும் அரச உத்தியோகத்தா் திருமணமான பின்னா் நீண்டகாலமாக வெளிநாட்டில் இருந்த தனது சகோதரியில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னா் தனது அலுவலகத்தில் வீட்டுக் கடன் எடுத்து வீடுகட்டி முடித்துள்ளார். தனது ஒரே ஒரு மகளுக்காகவே இந்த வீடு கட்டியதாகவும் அவள் படித்து முடிந்து சீதனம் கொடுப்பதற்காக என வீட்டைப் பெரும் செலவு செய்து கட்டியதாகவும் அவ் அரச உத்தியோகத்தா் தனது நண்பா்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இவ் வருடம் க.பொ.த உயா்தரம் எடுக்கும் இவரின் ஒரே ஒரு மகள் வீடு கட்டுவதற்கு உதவிக்கு வந்து நின்ற இளைஞனுடன் காதல் வயப்பட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவத்தை அறிந்த அரச அலுவலா் தனது மனைவியையும் தாக்கி விட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் வீடு கட்டுவதற்கு பொறுப்பெடுத்த அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரையும், காதலனின் தந்தையையும் மனைவியின் தம்பியுடனும் அவனது நண்பா்களுடனும் சென்று தாக்கியுள்ளார்.
பொலிசாரிடமும் இவா் முறையிட்டதாகவும் மாணவியை காதலன் கடத்தி வைத்திருக்கின்றார் என்றே முறையிட்டதாகவும் தெரியவருகின்றது. பொலிசாரிடம் கொடுக்கப்பட்ட காதலனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடா்பெடுத்த பொலிசார் காதலனுக்குப் பதிலாக மாணவி கதைத்து தான் 18 வயதுக்கு மேற்பட்டவள் என்றும் தான் கடத்தப்படவில்லை எனவும் அத்துடன் காதலித்தவனுடன் தனக்கு திருமணப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொலிசார் வழக்குப் பதிவு செய்யாமல் இவா்களை அனுப்பியுள்ளனா். அத்துடன் மாணவி பொலிசாருக்கு தான் க.பொ.த உயா்தரப் பரீட்சை எடுக்கவுள்ளதாகவும் தனது அப்பாவிடம் இருந்து தனக்கு பாதுகாப்புத் தரவேண்டும்
எனவும் தெரிவித்துள்ளார். இதனை அரசஉத்தியோகத்தரான தந்தையிடம் தெரிவித்த பொலிசார் மாணவியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எச்சரித்து அனுப்பியதாகத் தெரியவருகின்றது.